112. நலம்புனைந்துரைத்தல்
குறள் பால்:காமத்துப்பால். குறள் இயல்:களவியல். அதிகாரம்: நலம்புனைந்துரைத்தல் .
1111 | நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள். |
|
1112 | மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண் பலர்காணும் பூவொக்கும் என்று. |
|
1113 | முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு. |
|
1114 | காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் மாணிழை கண்ணொவ்வேம் என்று. |
|
1115 | அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு நல்ல படாஅ பறை. |
|
1116 | மதியும் மடந்தை முகனும் அறியா பதியின் கலங்கிய மீன். |
|
1117 | அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல மறுவுண்டோ மாதர் முகத்து. |
|
1118 | மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி. |
|
1119 | மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின் பலர்காணத் தோன்றல் மதி. |
|
1120 | அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம். |
|
Last modified: Tuesday, 1 February 2022, 6:01 AM