111. புணர்ச்சிமகிழ்தல்
குறள் பால்:காமத்துப்பால். குறள் இயல்:களவியல். அதிகாரம்: புணர்ச்சிமகிழ்தல் .
1101 | கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள. |
|
1102 | பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து. |
|
1103 | தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு. |
|
1104 | நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் தீயாண்டுப் பெற்றாள் இவள். |
|
1105 | வேட் ட பொழுதின் அவையவை போலுமே தோட் டார் கதுப்பினாள் தோள். |
|
1106 | உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள். |
|
1107 | தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் அம்மா அரிவை முயக்கு. |
|
1108 | வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை போழப் படாஅ முயக்கு. |
|
1109 | ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் கூடியார் பெற்ற பயன். |
|
1110 | அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு. |
|
இறுதியாக மாற்றியது: செவ்வாய், 1 பிப்ரவரி 2022, 6:01 காலை